டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திருச்சியில் தி.கவினருக்கும், பாரத முன்னேற்றக் கழகத்தினருக்கும் இடையே கைகலப்பு

திருச்சியில் இன்று நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தி.க. தலைவர் வீரமணி வந்துள்ளார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:41 pm

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சியில் இன்று நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தி.க. தலைவர் வீரமணி வந்துள்ளார்.

இதற்கிடையே இந்த மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரத முன்னேற்றக் கழகம் கட்சிக் காரர்கள் சிலர் வீரமணிக்கு கருப்புக் கொடி காட்டப்போவதாகவும், வீரமணி படத்துக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தப் போவதாகவும் கூறினர்.

இதற்காக திருச்சி பாலக்கரை அருகே பாரத முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 80 முதல் 100 பேர் திரண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த திராவிடக் கழக பிரமுகர்களுக்கும் பாரத முன்னேற்றக் கழகத்தினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.