பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தபோது, சிறைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் தமிழக அரசு மீதும், முதல்வர் மீதும் அவதூறாகப் பேசியதாக திருச்சி அரசு வழக்குரைஞர் அசோகன் புகார் பதிவு செய்தார். அதன்படி, வழக்கு விசாரணக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆரஜாகக் கூறி ராமதாஸுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டிருந்தது. ஆனால், அவர் இன்று ஆஜராகவில்லை. அவர் சார்பாக வழக்குரைஞர் லாரன்ஸ் ஆஜரானார்.