அதேபோல், அங்கு மேற்கொள்ளப்படும் நெல், சோளம் மற்றும் மானாவாரி பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள், உயர் விளைச்சல் ரகங்கள், எண்ணெ வித்து பயிரான சூரியகாந்தி, ஆமணக்கு போன்றவைகளின் உயர் விளைச்சல் ரகங்கள் குறித்தும் நேரி்ல் பார்வையிட்டனர். பின்னர் அங்கு நவீன வேளாண்மையில் இயந்திரங்களின் பயன்பாடு, பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும் அங்குள்ள அனுபவ விவசாயிகள் விரிவாகவும், விளக்கமாகவும் நடைமுறை கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.இந்த பட்டறிவு பயணத்தில் பங்கேற்ற விவசாயிகள் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனங்களில் நடந்து வரும் ஆராய்ச்சிகள் மற்றும் செயல் விளங்ககங்களை நேரில் பார்வையிட்டு அறிந்து கொண்டதோடு, நவீன விவசாயம் செய்யும் முறையின் தொழில்நுட்பங்களோடு பயிர் சாகுபடியில் வருங்காலங்களில் பயன்படுத்துவது எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்குமென விவசாயிகள் கருத்து தெரிவித்தனர் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.