தற்போது, அரசு அலுவலகங்களில் சுத்தகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கேன்களில் உள்ள குடிநீரை உபயோகப்படுத்தி வருகின்றனர். இதனால், மண்பானைகளின் உபயோகம் படிப்படியாக குறைந்து, அதற்கு பதிலாக பிளாஸ்டிக் கேன்களை உபயோகிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. மேலும், இது அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும், அதோடு மக்கும் தன்மையில்லாத நிலையை உடையதால் பூமியில் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் நிலையிலும் பிளாஸ்டிக் கேன்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் விலை அதிகம் கொடுத்து வாங்கப்பட்ட மண்பானைகளில் குடிதண்ணீர் பிடித்து வைப்பதற்க்கு பயன்படுத்தாமல் வெளியில் வீணாக வீசியுள்ளனர்.