தமிழகம் முழுவதும் நிகழாண்டு முதல் தொடர் மற்றும் முழுமையான முப்பருவ கல்வி முறையை 9-வது வகுப்பில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதை செயல்படுத்துவதற்கு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறை பயிற்சியை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்படுகிறது.இதில், விருதுநகர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்களுக்கு வருகிற 18-ம் தேதி ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. அதேபோல், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்களுக்கு தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்களுக்கு இந்து மேல்நிலைப்பள்ளியிலும் வைத்து நடைபெற இருக்கிறது. எனவே இப்பயிற்சியில் தலைமையாசிரியர்கள் அனைவரும் குறிப்பிட்ட இடங்களில் நடைபெறும் வழிகாட்டு நெறிமுறை பயிற்சியில் பங்கேற்று பயனடைய வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொறுப்பு) அமுதவள்ளி தெரிவித்தார்.