அதையடுத்து, நிகழாண்டில் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம், கொங்கணாபுரம் உள்ளிட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தலா 3 பேரும், திருத்தங்கல், காரிசேரி, கட்டணார்பட்டி ஆகிய பட்டாசு ஆலை வெடிவிபத்துக்களில் தலா ஒருவரும், விஜயரெங்கையாபுரம் பட்டாசு ஆலை விபத்தில் 2 பேரும், சிவகாசி அருகே பராசக்தி ஆலை விபத்தில் 3 பேரும், அதையடுத்து ஏப்.28-ம் தேதி நடந்த விபத்தில் அதிகமாக 8 பேர் வரையிலும் உயிரிழந்துள்ளனர். எனவே 10 வெடிவிபத்துக்களில் இதுவரையில் 22 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.தற்போது, சிவகாசி அருகே விளாம்பட்டி தனியார் பட்டாசு ஆலையில் உற்பத்தி செய்வதற்கு மணி மருந்துக் கலவை செய்யும் போது இன்று ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தும், 13 பேர் வரையிலும் காயமும் அடைந்துள்ளனர். இதுபோன்ற வெடிவிபத்துக்கள் ஏற்படுவதற்கு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றாத நிலையில் மணி மருந்தைக் கையாளும் போதுதான் வெடிவிபத்துக்கள் இதுவரையில் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.