இன்றைய காலகட்டத்தில் மாணவ, மாணவிகள் பல்வேறு அறிவுத்திறன்களை பெற்று விளங்குகின்றனர். அதனால், ஆசிரியர்களும் தங்களது துறைச்சார்ந்த அறிவு, தகவல் தொடர்பு உள்ளிட்ட திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.21-வது நூற்றாண்டில் பல்வேறு துறைகளில் தொழிற்நுட்பம் வளர்ச்சி மாற்றங்களை ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மடிக்கணினி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதால், அதிகமான செய்திகளை தெரிந்து வைத்துள்ளனர். அதனால், ஆசிரியர்கள் வாழ்நாள் கற்றுக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். பல்வேறு புதுமைகளை படைக்க மாணவர்களை ஊக்கவிக்க வேண்டும்.