ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கொளுத்தும் கத்தரி வெயில்: விருதுநகர் பகுதியில் நொங்கு, பதநீர் விற்பனை மும்முரம்

விருதுநகர் பகுதியில் கோடைக்காலம் தொடங்கியதிலிருந்தே கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால், பகலில் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்து வருகின்றனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:37 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் கோடையில் கொளுத்தி வரும் கத்தரி வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக பொதுமக்கள் குளிர்ச்சியான பொருள்களை அருந்தி  வருவதால் நொங்கு மற்றும் பதநீர் வியாபாரம் மும்முரமாக நடந்து வருகிறது.

விருதுநகர் பகுதியில் கோடைக்காலம் தொடங்கியதிலிருந்தே கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால், பகலில் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த  நேற்று(சனிக்கிழமை)முதல் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதனால், வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கிறது.இதனால், கோடை வெப்பத்தை தடுக்கும் வகையில் பொதுமக்கள் குளிர்ச்சியான பொருள்களின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால், தண்ணீர் பழம், வெள்ளரிக்காய் மற்றும் பழம், பதநீர் மற்றும் நொங்கு, இளநீர் உள்ளிட்ட பொருள்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இதையொட்டி மதுரை கச்சேரி சாலை, விருதுநகர்-சிவகாசி சாலை, ஆட்சியர் அலுவலக வளாகச் சாலை, அருப்புக்கோட்டை சாலை ஆகிய பகுதிகளில் புற்றீசல் போல் பதநீர் மற்றும் நொங்கு வியாபாரத்திற்கு தற்காலிகமாக  கடை விரித்துள்ளனர்.

மேலும், இக்கடைகள் ஒதுக்கு புறமாக இருப்பதால் வாகனங்களில் வருகின்றவர்கள் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் பதநீர், பனை நொங்குகளை விலை அதிகமாக இருந்தாலும் ஆர்வத்துடன் அருந்தி வெப்பத்தை தனித்துக் கொள்கின்றனர். ஒரு கப் பதநீர் ரூ.10 முதல் ரூ.15 வரையில் நேரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், உடைத்த 3 பனை நொங்குகள் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதிலும், தண்ணீருடன் நொங்கு அதிகமாகவே விற்பனை செய்யப்படுகிறது. பனை பொருள்கள் கோடைக்கால சீசனில் மட்டுமே கிடைக்கும் என்பதாலும், விலை அதிகமாக இருந்த போதிலும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

இது குறித்து பனை பொருள் வியாபாரி தங்கரத்தினம் என்பவர் கூறுகையில், இப்பகுதியில் கடும் வெயில் அடித்து வருவதால், உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் நொங்கு மற்றும் பதநீர் உள்ளிட்டவைகளையே விரும்பி அருந்துகிறார்கள். சொந்தமாக பனை வைத்திருப்பவர்கள் இப்பொருள்களை குறைத்து விற்பனை செய்கின்றனர். அதேபோல், ஓண்டிப்புலிநாயக்கனூர், தாதம்பட்டி, ஓடைப்பட்டி, முத்துலாபுரம், சாத்தூர், இருக்கன்குடி, பாலவநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் குத்தகை எடுத்தவர்களிடம் இருந்துதான் பதநீர் மற்றும் நொங்குகளை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். மேலும், கடினமான வெயிலையும் சாமளித்து வியாபாரம் செய்தால் ஒரு நாளைக்கு போட்ட முதலுடன் கூலியாக ரூ.400 முதல் 500 வரையில் கிடைக்கும். அதிலும், கத்திரி வெயில் காலத்தில் மட்டும் பனைப் பொருள்கள் அதிகமாக விற்பனையாகும் எனவும் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.