டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ராமதாஸ் ஜாமீன் மனு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

பாமக நிறுவுனர் ராமதாஸ் சார்பில் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 9:40 am

சா. ஜெயப்பிரகாஷ்

பாமக நிறுவுனர் ராமதாஸ் சார்பில் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஜாமீன் மனு தொடர்பாக போலீஸ் தரப்பில் இருந்து பதில் மனு தக்கல் செய்ய ஒரு நாள் கால அவகாசம் கோரப்பட்டது. இதை அடுத்து, நீதிபதி  சிவக்குமார் இந்த விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார். பாமக சார்பில் மாநில சட்டப் பாதுகாப்பு குழுத் தலைவர் கே.பாலு ஆஜரானார். ராமதாஸ் பொதுக்கூட்டத்தில் பேசியது குறித்தும், சென்ற ஆண்டு திருக்கழுக்குன்றத்தில் பேசியதன் பேரிலும், இந்த ஆண்டு மாமல்லபுரத்தில் பேசியதன் பேரிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, திருக்கழுக்குன்றம் போலீஸார் நீதிமன்றத்தில் பிடியாணை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய ஒரு நாள் கால அவகாசம் கேட்டனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை நாளைக்க்கு ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.