கடலூர் முதுநகர் பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பத்மராஜ். இவரது மனைவி விஜயமாலா(28). 2 குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுக்கு முன்பு பத்மராஜ் இறந்து விட்டார். துப்புரவு வேலை செய்து குழந்தைகளுடன் விஜயமாலா வாழ்க்கை நடத்தினார். கடந்த செவ்வாய்க்கிழமை சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்தார். பம்ப் செய்த போது ஸ்டவ் திடீரென வெடித்து அவர் மீது தீப்பிடித்தது. இதில் பலத்த தீக்காயமடைந்து, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இறந்தார்.இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.