நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பொதுத் தேர்வில் விடைகளை எழுதிக் காட்டிய ஆசிரியர்கள் : தேர்வு மையம் மாற்றம்

நாமக்கல் பகுதியைச் சேர்ந்த பொம்மைக்குட்டுமேடு என்ற ஊரில் அரசுப் பள்ளியில் திங்களன்று நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வின் போது விடைகளை ஆசிரியர்கள் எழுதிக் காட்டியதாகத் தெரிய வந்ததை அடுத்து தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:47 am

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் பகுதியைச் சேர்ந்த பொம்மைக்குட்டுமேடு என்ற ஊரில் அரசுப் பள்ளியில் திங்களன்று நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வின் போது விடைகளை ஆசிரியர்கள் எழுதிக் காட்டியதாகத் தெரிய வந்ததை அடுத்து தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது.

கடந்த திங்கள் கிழமையன்று இயற்பியல் பாடத்துக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. அப்போது பொம்மைக்குட்டுமேடு பகுதியில் உள்ள காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் 2 ஆசிரியர்கள் விடைகளை காகிதத்தில் எழுதி ஜன்னல் வழியாக மாணவர்களுக்குக் காண்பித்ததாகக் கூறப்படுகிறது.

இதனை பார்த்த தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் தேர்வுத் துறைக்கு புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த பள்ளியின் தேர்வு மையத்தை ரத்து செய்த தேர்வுத் துறை, இனிமேல் வரக் கூடிய பிளஸ் 2 பொதுத் தேர்வுகளையும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளையும், செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்த உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.