சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திருச்சியில் ராஜபக்ச உருவ பொம்மை எரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது

திருச்சியில் இலங்கை அதிபர் ராஜபக்ச உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 9:35 am

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சியில் இலங்கை அதிபர் ராஜபக்ச உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி பேருந்து நிலையம் அருகே கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இலங்கை அதிபர் ராஜபக்சவின் உருவ பொம்மையை எரித்தனர். 

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அந்த தீர்மானத்தை இந்தியா ஐ.நா. சபையில் முன்மொழிய வேண்டும் என்றும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட  செயலாளர் க. அரசு, புறநகர் மாவட்ட செயலாளர் தமிழாதன் தலைமை தாங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.