நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஓய்வு பெற்ற போலீஸார் சேமநலநிதி கையாடல்: எஸ்பி அலுவலக பணியாளர்கள் 3 பேர் பணி இடைநீக்கம்

கடலூர் மாவட்ட காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற போலீஸாக்கு சேரவேண்டிய சேமநலநிதி, பணிக்கொடை ஆகிய பணபலன்கள் கையாடல் செய்யப்பட்டது தொடர்பாக

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:45 am

VASUDEVAN.K

ஓய்வு பெற்ற போலீஸாரின் சேமநலநிதி கையாடல் தொடர்பாக எஸ்பி அலுவலக நிதிப்பிரிவு ஊழியர்கள் 3 பேரை பணி இடைநீக்கம் செய்து எஸ்பி ஆ.ராதிகா உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்ட காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற போலீஸாக்கு சேரவேண்டிய சேமநலநிதி, பணிக்கொடை ஆகிய பணபலன்கள் கையாடல் செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆயுதப்படை போலீஸ் ஏட்டு செந்தில்குமார், பண்ருட்டி போலீஸ்காரர் முரளி ஆகிய இருவரை ஏற்கனவே கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பிரச்னையில் தொடர்புடைய எஸ்பி அலுவலக நிதிப்பிரிவு பணியாளர்கள் மீதும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தநிலையில் இப்பிரச்னை தொடர்பாக எஸ்பி அலுவலக நிதிபிரிவில் பணியாற்றும் கண்காணிப்பாளர் முருகன்(55), காசாளர் ராஜாராமன்(48), இளநிலை உதவியாளர் கார்த்திகேயன் ஆகிய 3 பேரையும் பணி இடைநீக்கம் செய்து எஸ்பி ஆ.ராதிகா  உத்தரவிட்டுள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.