கடலுக்குள் அமைச்சர் சென்ற படகு கோளாறில் நின்றதால் பரபரப்பு
கடலூரில் முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு படகுப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை இந்தப் படகுப் போட்டியை அ


கடலூரில் முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு படகுப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை இந்தப் படகுப் போட்டியை அமைச்சர் சம்பத் துவக்கி வைக்க கடலுக்குள் ஒரு படகில் சென்றார். படகுப் போட்டி துவக்கி வைக்கப்பட்ட பிறகு, போட்டியில் கலந்துகொண்ட படகெல்லாம் கரை திரும்பிய நிலையில், போட்டியை துவக்கி வைத்த அமைச்சரின் படகு கரை திரும்பவில்லை. இதனால் அந்தப் பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் சென்ற படகு கோளாறு காரணமாக நடுவிலேயே நின்று விட்டது, பின்னர் வேறு படகின் மூலம் அவர் அழைத்து வரப்பட்டதும்தான் பலருக்கு நிம்மதி வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...