டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வறட்சி நிவாரணம் வழங்காத கூட்டுறவு அலுவலர்களை தாக்கிய விவசாயிகள் மீது புகார்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அருணாச்சலாபுரம் கிராமத்தில் கூட்டுறவு விவசாய கடன் சங்க விவகார எல்கைக்கு உள்பட்ட கிராமங்களில் வறட்சி நிவாரணம் பெறாதவர்களுக்கு இன்று

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:58 pm

எஸ். பாண்டியன்

திருச்சுழி அருகே வறட்சி நிவாரணம் வழங்காத ஆத்திரத்தில் கூட்டுறவு விவசாய வங்கி அலுவலர்களை விவசாயிகள் தாக்கியதில் காயம் அடைந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அருணாச்சலாபுரம் கிராமத்தில் கூட்டுறவு விவசாய கடன் சங்க விவகார எல்கைக்கு உள்பட்ட கிராமங்களில் வறட்சி நிவாரணம் பெறாதவர்களுக்கு இன்று வழங்கப்பட்டது. இதில், சலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி(46), கணேசன்(45) மற்றும் குமாரவேல்(45) ஆகியோர் வறட்சி நிவாரணம் பெறுவதற்காக வங்கிக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் சிட்டா அடங்கல் உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கிராம நிர்வாக அலுவலர் சான்றோடு மற்றும் கூட்டுறவு வங்கி செயலாளர் போஸை  அணுகியுள்ளனர்.

அப்போது அங்கிருந்த மறவர் பெருங்குடியைச் சேர்ந்த விற்பனையாளர் பழனிவேல்ராஜன், காசாளர் செல்வம் மற்றும் செயலாளர் போஸ் ஆகியோர் ஆவணங்களை வாங்கி சரிபார்த்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது குறித்து சுட்டிக் காட்டினார்கள். இதனால், ஆத்திரம் அடைந்த விவசாயிகள் தகாத வார்த்தை பேசியுள்ளனர். இதையடுத்து, அலுவலர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், விற்பனையாளர் பழனிவேல்ராஜனை கையால் கண்ணைக்குத்தி, அறைந்ததில் காயம் அடைந்தார். அதேபோல், மற்ற அலுவலர்களை கைகளால் தாக்கியும் உள்ளனர். இதில், விவசாயிகள் குமரேசன் கணேசன் ஆகியோரும் காயம் அடைந்தனர்.

எனவே இது தொடர்பாக எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் விற்பனையாளர் பழனிவேல்ராஜன் தரப்பிலும், விவசாயிகள் தரப்பில் குமரேசனும் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.