அதன் அடிப்படையில் இத்தேர்வு விருதுநகர் பகுதியில் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கேவிஎஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஹாஜிபி மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டையில் தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி எஸ்.எச்.என்.கே.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எச்.என்.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல் எஸ்.என்.பி.மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த 9 தேர்வு மையங்களில் மொத்தம் 4254 பேர் தேர்வில் பங்கேற்றனர். அதில், 187 பேர் வரையில் தேர்வில் பங்கேற்கவில்லை.