இந்த மாநாட்டிற்கு அகிலந்திய தலைவர் சுந்தர்ராமன் தலைமை வகித்தார். மாநில தலைவர் எம்.பெருமாள், தென்மண்டலச் செயலாளர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்புச் செயலாளர் அழகேசன், உதவி கோட்ட கண்காணிப்பு செயலாளர் வி.மாரியப்பன், மாநில ஆலோசகர் கேசவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு: கல்வி வேலைவாய்ப்பு தொடர்பான எஸ்.சி, எஸ்.டி ரிசர்வேசன் அனைத்தையும் இந்திய அரசியல் சட்ட 9-வது பிரிவில் சேர்க்க வேண்டும்.