விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ஐ.சி.ஏ காலனியைச் சேர்ந்த ஆர்.சக்திவேல்ராஜா. இவர் விருதுநகரில் தன்னுடைய பெயரிலும், மனைவி பெயரிலும் உளுத்தம் பருப்பு, மாட்டுத் தீவனம், வேப்பம் புண்ணாக்கு ஆகியவைகளை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வாங்கி மொத்த வியாபார தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் விருதுநகரைச் சேர்ந்த தர்மர் நாடார் என்பவரின் மகன் பிரபாகர் விருதுநகர்-அருப்புக் கோட்டை சாலையில் பருப்பு உடைக்கும் ஆலை நடத்தி வருகிறார். அதேபோல், இவரது மகன் சிவசுப்பிரமணியன் பெயரிலும், மனைவி வெண்ணிலா பெயரிலும் இதே நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் கணக்காளர் நாகேந்திரன், மேலாளர் ஹரிஹரன் மற்றும் மேற்பார்வையாளர் சாரதி ஆகியோர் சக்திவேல்ராஜாவை அணுகி உளுத்தம் பருப்பு அனுப்பி வைத்தால் குறைந்த விலையில் அரைத்து தருவாதக பேரம் பேசினார்களாம்.