மாநில அளவில் காவலருக்கான துப்பாக்கி சுடும் போட்டி சென்னை ஒத்திவாக்கம் மைதானத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு புதன்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் தென் மண்டல அளவில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மயில்வாகனன்(சேத்தூர் காவல் நிலையம்), செல்வக்குமார்(விருதுநகர்-போக்குவரத்து காவல்), மாரியப்பன்(விருதுநகர் கிழக்கு காவல் நிலையம்), முருகேசன்(விருதுநகர்-ஆயுதப்படை பிரிவு) ஆகிய 4 பேர் கலந்து கொண்டனர். இதில், தோன்றி மறையும் டார்க்கெட் பிரிவில் 300 மீட்டர் தூர துப்பாக்கி சுடும் போட்டியில் ஆயுதப் படை பிரிவு காவலர் முருகேசன் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் பெற்றார்.