இப்பணத்தை வேலை முடிந்தவுடன் ஒப்பநதகாரர்களுக்கு உடனே பட்டுவாடா செய்ய வேண்டும். இந்நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் வழங்காமல் அப்பணத்தை தனது வீட்டில் வைத்துள்ளார். இது தொடர்பாக ரகசிய தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.சியமாளா தலைமையில் போலீஸார் சோதனை செய்து பணத்தை கைப்பற்றினார்கள். அப்போது, போலீஸாரிடம் வனத்துறை அலுவலர் அலுவலகத்தில் பாதுகாப்பில்லாத காரணத்தினால் தான் கையிருப்பாக பணத்தை வைத்திருந்ததாகவும், அதற்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்ததால் திரும்ப பணத்தை கொடுத்துள்ளனர்.இதையடுத்து, இக்குறிப்பிட்ட பணத்திற்கு எந்தெந்த பணிகள் என்பது குறித்தும், திட்ட மதிப்பீடு மற்றும் ஒப்பந்தகாரர்கள் விவரத்தை அளிக்குமாறு போலீஸார் கேட்டுள்ளனர்.