விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. ஏற்கனவே இந்த பண்டகசாலையின் 21 உறுப்பினர் பதவிகளுக்கு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்களித்து தலைவரை தேர்வு செய்ய வேண்டும். அதற்கான தேர்தல் முறையாக தேர்தல் அதிகாரி பிரேம்லால் மூலம் அறிவிக்கப்பட்டது. அதன் வேட்பு மனுத்தாக்கல் காலை 10 மணி முதல் 11 மணி வரையில் நடைபெற்றது. அதையடுத்து, 11 மணி முதல் 11.30 வரையில் வேட்பு மனு பரிசீலனையும், 11.45 மணிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடவும், 11.45 முதல் 12.15 மணி வரையில் வேட்பு மனு திரும்ப பெறவும், 12.30 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியலும், 12.30 மணி முதல் 1 மணிக்குள் வாக்கு பதிவுக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.