இதில், சிறப்பு விருந்தினராக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் குத்துவிளக்கேற்றி பொதுமக்களின் உபயோகத்திற்காக இப்பாதையை தொடங்கி வைத்து பேசியதாவது: தற்போது ரயில்வே துறையில் பல்வேறு மீட்டர்கேஜ் இருப்பு பாதை அனைத்தும் அகல ரயில்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுவருகிறது. அந்த வகையில் விருதுநகர் மானாமதுரை இடையேயான மீட்டர்கேஜ் பாதையை அகல ரயில்பாதையாக மாற்றுவதற்கு 2007-08 திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் ரூ.231 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.67 கி.மீ தூரம் உள்ள இப்பாதையில் விருதுநகர்-மானாமதுரை இடையே அருப்புக்கோட்டை, நரிக்குடி, திருச்சுழி ஆகிய ரயில் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், 5 பெரியளவிலான பாலங்கள், 145 சிறிய பாலங்கள், 5 ரயில் நிலையங்கள், 31 ரயில் கிராசிங்குகள் புதுப்பிக்கப்பட்டு மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.