புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல், பட்டதாரி ஆசிரியர்கள் மேல் நிலை வகுப்புகளுக்கு பாடம் நடத்தி அனுபவம் பெறாமலே, மாவட்ட கல்வி அதிகாரிகளாகவும், முதன்மைக் கல்வி அதிகாரிகளாகவும் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. அதையடுத்து, அவர்களின் உத்தரவுக்கு முதுகலை ஆசிரியர்கள் கட்டுப்பட வேண்டியிருக்கிறது. எனவே முரன்பாடுகளை ஏற்படுத்தும் அரசாணை எண் 720 ஐ ரத்து செய்ய வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியம் பெறுவதில் வேறுபாடு நிறைய உள்ளதை களைய வேண்டும். இதற்காக நியமனம் செய்த குழுவின் அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்.