ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தென்காசியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பான், குட்கா பறிமுதல்

தென்காசியில் சுவாமி சந்நிதித் தெருவில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் தேவிகா தலைமையில் 30  பேர் கொண்ட குழுவினர், 7 குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:45 pm

பா.​ பிரகாஷ்

தென்காசியில் சுவாமி சந்நிதித் தெருவில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் தேவிகா தலைமையில் 30  பேர் கொண்ட குழுவினர், 7 குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டனர். தென்காசி நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் குறித்து அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.  இந்த சோதனையில், ஒரு கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பான்மசாலா, குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.