காதலர் தினம் : நாமக்கல் மலைக்கோட்டையில் குவிந்த காதல் ஜோடிகள்
காதலர் தினத்தையொட்டி ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்ததால் நாமக்கல் நகரின் மையத்திலுள்ள மலைக்கோட்டை காதல் கோட்டையாக காட்சியளித்தது.


காதலர் தினத்தையொட்டி ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்ததால் நாமக்கல் நகரின் மையத்திலுள்ள மலைக்கோட்டை காதல் கோட்டையாக காட்சியளித்தது. ஆண்டு முழுவதும் வந்து செல்லும் காதலர்கள் கோட்டையின் வரலாற்றுச் சிறப்பை உணராமல் மதில் சுவர்களில் பெயர்களை செதுக்குவதால் மலைக்கோட்டையின் சுவர்கள் சிதலமடைந்து வருகின்றன.
உலக காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி காதலர்கள் கோயில்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சந்தித்துக் கொள்வது வழக்கம். அதன்படி, தமிழகத்திலுள்ள 411 புரதான நினைவுச் சின்னங்களில் ஒன்றான நாமக்கல் மலைக்கோட்டையிலும் ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்தனர். இதுதவிர, புதுமண ஜோடிகளும் காதல் தினத்தை கொண்டாட மலைக்கோட்டைக்கு வந்திருந்தனர்.
இந்த காதல் ஜோடிகளை காண வழக்கத்துக்கு மாறாக இளைஞர் பட்டாளமும் மலைக்கோட்டையில் குவிந்தனர். அவர்களால் பிரச்னைகள் ஏற்பட்டுவிடாமல் தடுக்க தொல்லியல் துறை அலுவலர்கள் சிலரும் மலைக்கோட்டையின் மேல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...