ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஏற்காடு வாக்குப்பதிவு : 12 மணி நிலவரப்படி 43% வாக்குப்பதிவு

சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதிக்கு நடைபெறும் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது. மதியம் 12 மணி நிலவரப்படி 43% வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:06 pm

தமிழ்ச்செல்வன்

சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதிக்கு நடைபெறும் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது. மதியம் 12 மணி நிலவரப்படி 43% வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுவரை நடந்த தேர்தல்களிலேயே 12 மணிக்கு 43% வாக்குகள் பதிவாகியிருப்பது இதுவே முதல் முறை என்றும், இது மிகவும் அதிகமான வாக்குப்பதிவு என்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் மறைந்த பெருமாளின் மனைவி பெ.சரோஜாவும், திமுக சார்பில் வெ.மாறனும் போட்டியிடுகின்றனர்.

இவர்களுடன் 9 சுயேச்சை வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் உள்ளனர்.

நோட்டா' வசதி: யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக வாக்குப் பதிவு இயந்திரத்தில் "நோட்டா' பொத்தான் வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்காடு தொகுதி முழுவதிலும் 120 மையங்களில் 290 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.