ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தென்காசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை

தென்காசியை அடுத்த மேலகரம் பாரதிநகரில் வசிப்பவர் வெங்கடேஷ் (44). இவர் கத்தார் நாட்டின் கெமிக்கல் இஞ்சினியரிங் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றுகிறார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:21 pm

பா.​ பிரகாஷ்

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

தென்காசியை அடுத்த மேலகரம் பாரதிநகரில் வசிப்பவர் வெங்கடேஷ் (44). இவர் கத்தார் நாட்டின் கெமிக்கல் இஞ்சினியரிங் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றுகிறார்.

இந்நிலையில் ஊருக்கு வந்திருந்த அவர், வீட்டைப் பூட்டிவிட்டு, கொடைக்கானல், ஊட்டி சென்றார். இந்நிலையில், நேற்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ. 19 ஆயிரம் மதிப்புள்ள கத்தார் ரியால் உள்ளிட்ட  வெளிநாட்டு கரன்ஸிகளையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.