குற்றாலம் வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பு
குற்றாலத்தில் திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோவில் வாடகைதாரர்கள் மற்றும் குற்றாலம் வியாபாரிகள் சங்கம் சார்பில் புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.


குற்றாலத்தில் திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோவில் வாடகைதாரர்கள் மற்றும் குற்றாலம் வியாபாரிகள் சங்கம் சார்பில் புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
குற்றாலநாத சுவாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட காலிமனை மற்றும் கட்டடங்களில் குடியிருந்தும் வியாபாரம் செய்து வரும் வணிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியாய வாடகையை தவறாக நிர்ணயம் செய்ததை மறுபரிசீலனை செய்யவேண்டும், பணம் செலுத்த செல்லும் வணிகர்களிடம் கையெழுத்து மட்டும் பெற்று பின்பு தன் இஷ்டம்போல் எழுதுவதைக் கண்டித்தும், பொதுநடைபாதையில் பொதுமக்கள் மற்றும் உல்லாச பயணிகள் நடந்து செல்லும் வடக்கு சன்னதி, மற்றும் சன்னதி தெரு வழி பாதையில் தாற்காலிக கடைகள் அமைத்ததை கண்டித்தும் பொய்யான நிலையை உருவாக்கி மேல் அதிகாரிகளுக்கு தவறான தகவல் கொடுத்து வியாபாரிகள் மீது இந்து அறநிலையசட்டம் 78ன்படி போடப் பட்டிருக்கும் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
மேலும் இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை எனில், அனைத்துக் கட்சியினருடன் ஆலோசித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் மற்றும் மலையில் குடியேறும் போராட்டம் நடத்தப் போவதாக வர்த்தக சங்க தலைவர் பா.ராமையா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...