விருதுநகர் கச்சேரி சாலையில் தூயயோவான் திருச்சபை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் முன்னாள் திருச்சபை நிர்வாக குழு உறுப்பினரான அல்லம்பட்டியைச் சேர்ந்த ஞான்சிதம்பரம்(68). தற்போது, இந்த ஆலயத்தின் போதகராக பால்ராஜ் சாமிதாஸ் உள்ளார். அதேபோல், பொருளாளராக இன்பசாலமன், செயலாளராக ஞானவெஸ்லியும், உறுப்பினர்களாக ஏஞ்சலின் மற்றும் நான்ஜி ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் திருச்சபைக்கு வரும் காணிக்கை பணம் மற்றும் பொருள்கள் விற்பனை பணம் ரூ.73.78 லட்சம் பணத்தை திருச்சபையின் வங்கிக் கணக்கில் போடாமல், தங்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தி இருப்பு வைத்துள்ளனர்.