டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகர் அருகே வாகன விபத்தில் பிளஸ்1 மாணவர் சாவு

விருதுநகரை அடுத்த என்.ஜி.ஓ காலனிப் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன். இவர் புதுதில்லியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரவீண்குமார்(16) தனது தாயாருடன் இருந்து

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:06 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பள்ளிக்குச் செல்வதற்காக சாலையில் ஓரமாக  நின்றிருந்த பிளஸ்1 மாணவன் மீது சாலை தடுப்பு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து இன்று உயிரிழந்தார்.

விருதுநகரை அடுத்த என்.ஜி.ஓ காலனிப் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன். இவர் புதுதில்லியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரவீண்குமார்(16) தனது தாயாருடன் இருந்து வருகிறார். அதோடு, பெரியவள்ளிக்குளம் கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றாராம்.

அப்போது,  அவரது வீடு அருகே 4 வழிச்சாலையை கடந்து தடுப்புச் சுவர் மீது பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்தாராம். அந்த வழியாக சென்னையில் இருந்து கயத்தாறு நோக்கி விரைவாக வாகனம் சென்றதாம். இதில், எதிர்பாரத விதமாக வாகனம் மோதியதால் சாலை தடுப்பில்(பேரிகாட்) இருந்து சிதறிய இரும்பு துண்டுகள் மாணவரின் தலையில் தாக்கியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்த சம்பவம் அறிந்து வந்த தாயார் வீட்டை விட்டு சாலைக்கு வந்து ஓரமாக நின்றிருந்த மகன் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதது அப்பகுதியில் இருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இது தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.