டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அனுமதியின்றி கருந்திரி கட்டுக்களை கடத்தியதாக ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, தாயில்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து சூலக்கரை மேடு வழியாக அருப்புக்கோட்டைக்கு பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்களை கடத்தி

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:05 pm

எஸ். பாண்டியன்

அருப்புக்கோட்டை அருகே அனுமதியின்றி வாகனத்தில் கடத்திச் சென்ற 40 ஆயிரம் மதிப்புள்ள கருந்திரி கட்டுக்களை வாகனத் தனிக்கையின் போது  மடக்கி பிடித்து வெள்ளிக்கிழமை இரவு வட்டாட்சியர் சந்திரசேகரன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, தாயில்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து சூலக்கரை மேடு வழியாக அருப்புக்கோட்டைக்கு பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்களை கடத்தி வருவதாக வட்டாட்சியர் சந்திரசேகரனுக்கு ரகசிய  தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை நகராட்சி காலனி-வெள்ளையாபுரம் சாலையில் வாகனத் தனிக்கையில் அதிகாரிகளுடன் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வ்நத வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டார். அப்போது பெரிய பண்டலாக இருந்ததை பிரித்த பார்த்த போது 4 ஆயிரம் கருந்திரி கட்டுக்கள் இருந்தது தெரியவந்தது.

இது குறித்த விசாரணையில் தாயில்பட்டி அருகே கட்டனஞ்செவல்பட்டியைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் கோபால்சாமி(50) என்பது தெரியவந்தது. மேலும், விசாரித்த போது வாகனத்தின் உரிமையாளர் கோப்பம்மாள் என்பதும், கருந்திரி கட்டுக்களை வெள்ளையாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் முனியசாமியின் பட்டாசு ஆலைக்கு கொண்டு செல்வதாகவும் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, கருந்திரி கட்டுக்களுடன் வாகனத்தை பறிமுதல் செய்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பாக ஓட்டுநர் கோபால்சாமியை போலீஸார் கைது செய்தனர். மேலும், வாகனத்தின் உரிமையாளர், பட்டாசு ஆலையை நடத்துவோர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.