டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திருச்சி வந்த பிரதமருக்கு தமிழக அமைச்சர்கள் வரவேற்பு

வெள்ளிக்கிழமை காலை திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக அமைச்சர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:04 pm

சா. ஜெயப்பிரகாஷ்

வெள்ளிக்கிழமை காலை திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக அமைச்சர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

திருச்சியை அடுத்த திருமயத்தில் உள்ள பிஎச்இஎல் நிறுவனத்தின் புதிய ஆலையைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் இன்று முற்பகல் 11.05க்கு சிறப்பு விமானத்தில், திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அவருக்கு தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செலவம், போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத் துறை அமைச்சர் டி.பிபுனாச்சி, மக்களவை உறுப்பினர் பா. குமார், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ  முரளி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

தமிழக அரசின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர், 11.10க்கு, திருச்சி விமான நிலையத்தில் இருந்து திருமயம் புறப்பட்டுச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.