விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சிவஞானபுரம் ஊராட்சியைச் சேர்ந்த என்.ஜி.ஓ காலனி, முல்லை நகர், லட்சுமி காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் குடியிருப்பவர்கள் குப்பைகளை கொட்டுவதற்காக நான்கு வழி் சர்வீஸ் சாலையோரத்தில் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இத்தொட்டிகளில் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட மக்காத குப்பைகளாகவே வந்து கொட்டுகின்றனர்.அதோடு, தொட்டிகள் நிறைந்தாலும் உடனே துப்புரவு பணி மேற்கொள்ளாத நிலையே இருக்கிறது. அதனால், தொட்டிக்கு அருகிலேயே மறுபடியும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதை, உடனுக்கு உடன் அகற்றப்படாமலும், தரம் பிரிக்கப்படாமலும் இருப்பதாலும் துர்நாற்றம் ஏற்படுகிறது. அந்த வழியாக செல்லும் பாதாசாரிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளது.