நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நின்றிருந்த லாரி மீது பஸ் மோதி, சாலையோரம் படுத்திருந்த ஆந்திர ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி

நாமக்கல் அருகே சாலையோரம் படுத்திருந்த ஐயப்ப பக்தர்கள் 2 பேர் மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

News image
Updated On :2 ஜனவரி 2024, 8:02 pm

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் அருகே சாலையோரம் படுத்திருந்த ஐயப்ப பக்தர்கள் 2 பேர் மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

நாமக்கல் அருகே புதுச்சத்திரம் என்ற இடத்தில் லாரி ஒன்று சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்தது. அதற்கு முன்புறம் ஆந்திராவில் இருந்து காரில் வந்த ஐயப்ப பக்தர்கள் தங்கள் காரை நிறுத்திவிட்டு, லாரிக்கும் காருக்கும் இடைப்பட்ட சாலைப் பகுதியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை அந்த வழியாக வந்த கர்நாடக பஸ் ஒன்று, வேகமாக லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில் லாரி வேகமாக நகன்று முன்புறம் படுத்திருந்த ஐயப்ப பக்தர்கள் மீது மோதியது. இதில், 2 பேர் பலியானார்கள். மேலும் பஸ் டிரைவரும் பலியானார். சிலருக்கு கை- கால் முறிந்து காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.