நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நாமக்கல்லில் குற்றவாளிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெறுவது தீவிரம்: காவல்துறை

நாமக்கல்லில் குற்றவாளிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெறுவது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 ஜனவரி 2024, 8:02 pm

தமிழ்ச்செல்வன்

நாமக்கல்லில் குற்றவாளிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெறுவது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குற்றங்களைக் கட்டுப்படுத்த தண்டனை பெற்று வெளியே வரும் குற்றவாளிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெறுவது நாமக்கல் மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், கடந்த 6 மாதங்களில் சேலம் சரகத்திலேயே திருச்செங்கோடு வட்டத்தில் மிக அதிகளவில் குற்றவாளிகளிடம் நன்னடத்தை உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்து தவறு செய்யும் குற்றவாளிகளின் இத்தகையை போக்கை தடுக்கும் விதமாக 106 வழக்குப்பிரிவின் கீழ் குற்றவாளிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெறப்படுகிறது.  நீதிமன்றத்தில் இந்த நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரம் அளிக்கும் குற்றவாளிகள் அடுத்த ஓராண்டுக்குள் எந்த குற்றங்களிலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு குற்றங்களில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்குரிய தண்டனையுடன் பழைய குற்றத்துக்கான தண்டனையும் சேர்த்து அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.