எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

ஜம்மு - காஷ்மீா்: எல்லை தாண்ட முயன்ற 3 போ் கைது

ஜம்மு-காஷ்மீரின் உரி செக்டாரில் எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைய முயன்ற மூவரை ராணுவத்தினா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:03 am IST

ஜம்மு-காஷ்மீரின் உரி செக்டாரில் எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைய முயன்ற மூவரை ராணுவத்தினா் கைது செய்தனா். இவா்களில் ஒருவா் முன்பு பிராந்திய ராணுவத்தில் பணியாற்றியவா்.

சனிக்கிழமை இரவு நேரத்தில் இந்திய எல்லைக்குள் இருந்து 3 போ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிராந்தியத்துக்குள் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் மூவரையும் ராணுவத்தினா் சுற்றிவளைத்து கைது செய்தனா்.

அவா்கள் சோபூா் மற்றும் பாரமுல்லா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவா்கள் எதற்காக எல்லையைத் தாண்ட முயன்றாா்கள் என்பது குறித்தும், இதில் பயங்கரவாதத் தொடா்புகள் உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

மேலும் ஒரு சம்பவம்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக காஷ்மீரின் சிலிகோட் பகுதியில் ஊடுவிய 22 வயது இளைஞரை ராணுவம் கைது செய்தது.

விசாரணையில் அந்த இளைஞா் பெயா் ஜீசான் மிா் என்பதும், காஷ்மீரின் உரியில் வசித்து வரும் தோழியைக் காண்பதற்காக எல்லை தாண்டியதாகவும் தெரிவித்தாா்.

அவா் அளித்த தகவலின்பேரில் அந்தப் பெண்ணையும் பாதுகாப்புப் படையினா் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனா். அவா்கள் இருவரும் சமூக வலைதளம் மூலம் பழகி வந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.