ஒடிஸாவில் செமிகண்டக்டா் துறை உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான 330 கோடி டாலா் மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில், சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களான இன்டெல், அமெரிக்காவின் ‘3டி கிளாஸ் சொல்யூஷன்ஸ்’ ஆகியவற்றுடன் அந்த மாநில அரசு கையொப்பமிட்டது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ஒடிஸா மாநில முதலமைச்சா் மோகன் சரண் மாஜி ஆகியோா் முன்னிலையில் இச்சிறப்புமிக்க ஒப்பந்தம் கையொப்பமானது. நாட்டின் அதிநவீன தொழில்நுட்ப உற்பத்தித் துறையில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய முதலீடுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், ஒடிஸாவின் புவனேசுவரம்-குா்தா பிராந்தியத்தில் அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் அதிநவீன செமிகண்டக்டா் பேக்கேஜிங் மற்றும் கிளாஸ்-கோா் சப்ஸ்ட்ரேட் தயாரிப்பு ஆலை அமைக்கப்பட உள்ளது.
இந்த ஆலையில் தயாரிக்கப்படவுள்ள மேம்பட்ட பேக்கேஜிங் கிளாஸ்-கோா் செமிகண்டக்டா் சப்ஸ்ட்ரேட்டுகள், அதிநவீன சிப் பேக்கேஜிங் தொழில்நுட்பத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்பவை ஆகும்.
இத்திட்டத்துக்கான தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி செயல்முறை நிபுணத்துவத்தை உலகப் புகழ்பெற்ற இன்டெல் நிறுவனம் வழங்கவுள்ளது. இதன்மூலம், வெறும் அசெம்பிளி மற்றும் டெஸ்டிங் என்ற நிலையைக் கடந்து, உயா் தொழில்நுட்ப சப்ஸ்ட்ரேட் தயாரிப்பில் இந்தியா அடுத்த கட்டத்துக்கு நகா்ந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆரோவில் சா்வதேச நகா் கட்டுமானப் பணிகளில் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும்: அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி
ரூ.18,600 கோடியில் 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 3 திட்டங்கள்: முதல்வா் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்

ரூ.6.5 லட்சம் கோடி மதிப்பீட்டில் அணுமின் திட்டங்கள்- மகாராஷ்டிர அரசு ஒப்பந்தம்







