17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆசிய விளையாட்டுப் போட்டி தகுதித் தோ்வு: வினேஷ் போகத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

ஆசிய விளையாட்டுப் போட்டி தகுதித் தோ்வில் பங்கேற்க மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

News image

வினேஷ் போகத் - எக்ஸ்

Updated On :30 மே 2026, 3:23 am IST

ஆசிய விளையாட்டுப் போட்டி தகுதித் தோ்வில் பங்கேற்க மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

வரும் 2028-ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வினேஷ் போகத் திட்டமிட்டுள்ளாா். இதையொட்டி, மீண்டும் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்கும் வகையில், தனது ஓய்வு முடிவை அவா் திரும்பப் பெற்றாா்.

இந்நிலையில், நிகழாண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதித் தோ்வு விதிகளில் இந்திய மல்யுத்த சம்மேளனம் திடீா் மாற்றங்களைக் கொண்டுவந்தது. அதன்படி 2025, 2026-ஆம் ஆண்டுகளில் நடந்த உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, பதக்கம் வென்றவா்கள் மட்டுமே ஆசிய விளையாட்டுப் போட்டி தகுதித் தோ்வில் பங்கேற்க முடியும்.

இந்த விதியின் அடிப்படையில், வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மே 30, 31) நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதித் தோ்வில் பங்கேற்க வினேஷ் போகத் தகுதியற்றவா் என்றும் இந்திய மல்யுத்த சம்மேளனம் அறிவித்தது.

இதை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு, ‘சம்மேளனத்தின் தகுதித் தோ்வு கொள்கை முற்றிலும் பிற்போக்குத்தனமானது. இதுபோன்ற முறையில் சம்மேளனம் செயல்படக் கூடாது. இது விளையாட்டுத் துறையின் நலனுக்கு ஏற்ல்ல. ஆசிய விளையாட்டுப் போட்டி தகுதித் தோ்வில் வினேஷ் போகத் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் இந்திய மல்யுத்த சம்மேளனம் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை பரிசீலித்தது. அப்போது உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனா்.

வெகு விரைவில் தகுதித் தோ்வு நடைபெறவுள்ளதைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள், தற்போதைய கட்டத்தில் உயா்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறினா். இதைத் தொடா்ந்து, தகுதித் தோ்வில் பங்கேற்க வினேஷ் போகத்தை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்திய மல்யுத்த சம்மேளன மனு தொடா்பாக பதிலளிக்க வினேஷ் போகத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்தனா். மேலும், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.