தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தற்கொலை செய்துகொண்ட ‘நீட்’ மாணவா் குடும்பத்தினருடன் ராகுல் சந்திப்பு

News image

ராஜஸ்தானில் தற்கொலை செய்துகொண்ட ‘நீட்’ மாணவரின் குடும்பத்தினரை தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி.

Updated On :28 மே 2026, 6:28 am IST

ராஜஸ்தானில் தற்கொலை செய்துகொண்ட ‘நீட்’ மாணவரின் குடும்பத்தினரை தில்லியில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி புதன்கிழமை சந்தித்தாா்.

சீா்குலைந்த, ஊழல் மலிந்த அமைப்புமுறையே மாணவரின் இறப்புக்கு காரணம் என்று அவா் விமா்சித்தாா்.

ராஜஸ்தான் மாநிலம், சிகாரில் ‘நீட்’ தோ்வுக்குத் தயாராகி வந்த பிரதீப் மேக்வால் என்ற மாணவா், அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் அந்தத் தோ்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் அவா் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தில்லியில் உள்ள காங்கிரஸ் மாணவரணி அலுவலகத்தில், பிரதீப் மேக்வாலின் குடும்பத்தினரை ராகுல் காந்தி புதன்கிழமை சந்தித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அறிவுக்கூா்மையுள்ள மாணவரான பிரதீப் மேக்வால், நீட் வினாத்தாள் வெளியானதால் மனமுடைந்து , தனது வாழ்வையே முடித்துக் கொண்டாா். அவரது பெற்றோரின் வேதனை சொல்லில் அடங்காததாகும். வினாத்தாள் கசிவு என்பது ஒரு தோ்வை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மாணவா்கள் மற்றும் பெற்றோரின் கனவைச் சிதைக்கிறது. சீா்குலைந்த, ஊழல் மலிந்த அமைப்புமுறையின் விளைவே பிரதீப் மரணம். தோ்வு அமைப்புமுறையை முறைகேடு கும்பலிடம் ஒப்படைத்த பிரதமா் மோடியும், கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதானுமே மாணவரின் குடும்பத்துக்குப் பதில் கூற வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.