சமூகம் தொடர்பான பிரச்னைகளில் வலுவாகக் குரலெழுப்ப காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் தலைவர்களை ராகுல் காந்தி வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைத் துறையின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். இந்தக் கூட்டத்தில், தங்கள் சமூகம் தொடர்பான பிரச்னைகளுக்கு எதிராக முஸ்லிம்கள் வலுவாகக் குரலெழுப்ப வேண்டும் என்றும், அவர்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தப் பாடுபடவும் கட்சியின் முஸ்லிம் தலைவர்களை ராகுல் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஒரு முஸ்லிமுக்கு அநீதி ஏதேனும் இழைக்கப்பட்டால், அவர் ஒரு சிறுபான்மையைச் சேர்ந்தவர் என்ற முறையில் குரலெழுப்பாமல், முஸ்லிம் என்ற முறையில் குரலெழுப்ப வேண்டும் என்று அவர் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தயங்கக் கூடாது என்பதே ராகுல் காந்தி கூற முயல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Rahul Gandhi pushes Congress to use ‘Muslim’ term without hesitation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








