தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாஜகவில் இணைந்த ராகவ் சத்தாவுக்கு மாநிலங்களவையில் புதிய பதவி!

மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தாவுக்கு மாநிலங்களவையில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

News image

மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா - X

Updated On :23 மே 2026, 4:27 pm IST

மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தாவுக்கு மாநிலங்களவையில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா, மாநிலங்களவையின் மனுக்கள் மீதான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை தலைவரான சிபி ராதாகிருஷ்ணன் இந்தக் குழுவை மறுசீரமைப்பு செய்து புதிதாகப் பணியாற்ற 10 உறுப்பினர்களைப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. அதில், ’ராகவ் சத்தா குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவைத் தலைவரால் மறுசீரமைப்பு செய்யப்பட்ட இந்தக் குழு தொடர்பான உத்தரவு மே 20 முதல் அமலுக்கு வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலங்களவை மனுக்கள் மீதான குழுவில் ராகவ் சத்தா தவிர்த்து ஹர்ஷ் மஹாஜன், குலாம் அலி, ஷம்பு ஷரன் படேல், மயங்க் குமார் நாயக், மஸ்தான் ராவ் யாதவ் பீதா, ஜெபி மாதர் ஹிஷாம். சுபாஷிஷ் குந்தியா, ருங்ரா நர்ஸாரி, சந்தோஷ் குமார் பி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு அறிக்கையில், மாநிலங்களவை உறுப்பினர் மேனகா குருசாமி, மாநிலங்களவையின் பெருநிறுவனச் சட்டங்கள் (திருத்த) மசோதா மீதான கூட்டுக் குழுவின் உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து ராகவ் சத்தா, சந்தீப் பாடக், அசோக் மித்தல் உள்ளிட்ட 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் கடந்த மாதம் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Raghav Chadha appointed chairman of Rajya Sabha Committee on Petitions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.