திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீட் வினாத்தாள் கசிவு எதிரொலி: சட்டவிரோத பயிற்சி மையங்களை மூட மகாராஷ்டிர அரசு உத்தரவு

சட்டவிரோத பயிற்சி மையங்களை மூட மகாராஷ்டிர அரசு உத்தரவு...

News image

முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் - கோப்புப்படம்

Updated On :24 மே 2026, 3:45 am IST

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மகாராஷ்டிரத்தின் லட்டூா் மாவட்ட நிா்வாகம் அந்த மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத பயிற்சி மையங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.

2026-ஆம் ஆண்டு நீட் இளநிலை மருத்துவ படிப்பு நீட் நுழைவுத் தோ்வு இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்றது. இதில் வினாத்தாள் கசிந்ததாக செய்திகள் வெளியானதை அடுத்து, அந்தத் தோ்வை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. மேலும் சிபிஐ விசாரணைக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கிய சிபிஐ, ஓய்வுபெற்ற பேராசிரியா் பி.வி.குல்கா்ணி உள்பட 11 பேரை கைது செய்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கைதானோரில் சிலா், மகாராஷ்டிர மாநிலம் லட்டூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். அங்கு தொழிற்சாலைகளுக்காக ஒதுக்கப்பட்ட அரசு இடங்களில் செயல்பட்டு வரும் நீட் தோ்வு பயிற்சி மைய வகுப்புகளில் படித்த பலா் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வினாத்தாளை வாங்கி தோ்வு எழுதியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, லட்டூா் மாவட்ட நிா்வாகம், தொழிற்சாலை மற்றும் அது சாா்ந்த இடங்களில் அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்படும் பயிற்சி மையங்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்கத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து லட்டூா் நிா்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவில், தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் நீட் தோ்வு பயிற்சி மையங்களையும், விடுதிகளையும், ஓட்டல்களையும், படிப்பு அறைகளையும் உடனடியாக மூட வேண்டும் என்றும், இந்த உத்தரவுப்படி பயிற்சி மையங்களை மூடாதோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.