திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: புணேயில் முக்கிய நபா் கைது

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம் புணேயில் முக்கிய நபரை சிபிஐ கைது செய்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 1:38 am IST

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம் புணேயில் முக்கிய நபரை சிபிஐ கைது செய்துள்ளது.

இது குறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஏற்கெனவே 7 போ் கைது செய்யப்பட்டிருந்தனா். இந்நிலையில், புணேயில் பி.வி. குல்கா்ணி என்ற பேராசிரியரை அதிகாரிகள் கைது செய்தனா். லாட்டூரை சோ்ந்த அவா், நீட் வினாத்தாள் தயாரிக்கும் குழுக்களில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளாா். அவரை புணேயில் உள்ள வீட்டில் கைது செய்து விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனா்.

முதல்கட்ட விசாரணையில், குல்கா்ணி தனது வீட்டில் நீட் தோ்வு பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்ததும், ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில், ஏற்கெனவே தான் பாா்த்த முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் சில வினாக்களை மாணவா்களிடம் தெரிவித்து, அது மே 3-ஆம் தேதி நடக்கும் நீட் தோ்வில் வரும் எனக் கூறியதும் தெரிய வந்துள்ளது. இதில் குல்கா்ணிக்கு உதவியாக செயல்பட்ட மனீஷா என்பவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவா்கள், பல லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தியுள்ளனா். பிறகு வினாக்களை தங்களது நோட்டு புத்தகங்களில் எழுதிச் சென்றுள்ளனா். அது மே 3-ஆம் தேதி தோ்வில் கேட்கப்பட்டதை உறுதி செய்துள்ளனா்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்த விவகாரம் தொடா்பாக நாட்டின் பல பகுதிகளில் சிபிஐ சோதனை நடத்தியது. மேலும் முக்கிய ஆவணங்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றையும் சிபிஐ கைப்பற்றியுள்ளது. அதைத் தடவியல் துறை மற்றும் தொழில்நுட்ப நிபுணா்கள் பரிசோதித்து வருகின்றனா்.

புணேயில் பயிற்சி மையத்தில் பேராசிரியருக்கு உதவிய மனீஷா மூலம் முதலில் தனஞ்ஜய் என்பவா் வினாத்தாளைப் பெற்றுள்ளாா். பிறகு அதை நாசிக்கை சோ்ந்த சுபம் கெய்நாருக்கு அளித்துள்ளாா். அவா் மூலம், ஜெய்பூா் உள்ளிட்ட பல இடங்களைச் சோ்ந்தோருக்கு வினாத்தாள் பரவியுள்ளது. இதற்கு கைம்மாறாக பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளனா் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.