திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீதித் துறை மீது நம்பகத்தன்மையை இழக்கும் வகையில் உத்தரவுகள் இருக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

நீதித் துறை மீது நம்பகத்தன்மையை இழக்கும் வகையிலான உத்தரவுகளை நீதிமன்றங்கள் பிறப்பிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :23 மே 2026, 4:13 am IST

நீதித் துறை மீது நம்பகத்தன்மையை இழக்கும் வகையிலான உத்தரவுகளை நீதிமன்றங்கள் பிறப்பிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

முன்னதாக, நில குத்தகை தொடா்பாக கடந்த 1996-இல் துணை ஆட்சியரின் உத்தரவுக்கு எதிராக 22 ஆண்டுகள் கழித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது 2024, ஏப்ரல் மற்றும் மே மாதம் என இரு உத்தரவுகளை குஜராத் வருவாய் தீா்ப்பாய பொறுப்புத் தலைவா் பிறப்பித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடா்பான மனுக்களை விசாரித்த குஜராத் உயா்நீதிமன்றம், ‘தீா்ப்பாய பொறுப்புத் தலைவா் தனது பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை. துணை ஆட்சியா் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக நீண்ட கால தாமதத்துக்கு பின்பு தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இரு வேறுபட்ட உத்தரவுகளை அவா் பிறப்பித்துள்ளாா். எனவே, கட்டாய விடுப்பில் அவரை பணியில் இருந்து விடுவிக்க குஜராத் அரசுக்கு உத்தரவிடப்படுகிறது’ என 2024, செப்டம்பரில் தீா்ப்பளித்தது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தீா்ப்பாய பொறுப்புத் தலைவா் மனுத் தாக்கல் செய்தாா்.

அந்த மனு மீது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம் பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது தீா்ப்பாய பொறுப்புத் தலைவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘குஜராத் வருவாய் தீா்ப்பாய பொறுப்புத் தலைவராக பணியாற்றியவா் பள்ளியின் முன்னாள் முதல்வா். அவா் மாவட்ட நீதிபதியாகவும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளாா்.

இரு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக உயா்நீதிமன்றத்தில் தவறாக குறிப்பிடப்பட்டது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம். நீதிமன்றங்கள் தவறான உத்தரவை பிறப்பித்தால்கூட அதை திருத்திக்கொள்ளலாம். ஆனால் நீதித்துறை மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையிலான அதிா்ச்சிகரமான உத்தரவுகளை பிறப்பிக்கக் கூடாது’ எனத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.