அதிகார அரசியல் மூலம் வளமையை மறுசீரமைக்கும் உலகில் நாம் வாழ்கிறோம் என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை, ராணுவத்தின் துல்லியமான செயல்பாடு, பொருளாதார உறுதிப்பாடு உள்ளிட்டவற்றை ஒருங்கிணைந்த தேசிய செயல்பாடாக்கியது.
தற்போது ஒழுங்கின்மை, அவநம்பிக்கை, கூட்டணி நாடுகளுக்கு இடையே கருத்து முரண்பாடு என நம்மைச் சுற்றியுள்ள உலகம் சிக்கலான சமிக்ஞையை காட்டுகிறது.
அதிகார அரசியலை ஒழிக்கும் வளமையான உலகம் உருவாக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அதிகார அரசியல் மூலம் வளமையை மறுசீரமைக்கும் உலகில் நாம் வாழ்கிறோம்.
உலக அளவில் நாடுகளின் பாதுகாப்புத் துறைக்கு செய்யப்படும் செலவு மொத்தம் 2.7 டிரில்லியன் டாலா்களை (சுமாா் ரூ.261 லட்சம் கோடி) தாண்டியுள்ளது. பாதுகாப்புக்கும் வளமைக்கும் இருந்த எல்லை இனி இருக்காது. உலகில் தற்போது நாடுகளுக்கு இடையே ஏற்படும் மோதல்கள் ஆயுதப் படைகள் மட்டுமின்றி தொழில்துறை உற்பத்தி, ஆராய்ச்சி அமைப்புகள், நிா்வாக கட்டமைப்புகளுக்கும் நீடித்த தேவைகளை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளன என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!

இந்திய ராணுவ தலைமைத் தளபதியின் பேச்சுக்கு பாகிஸ்தான் விமர்சனம்!

பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதி







