திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அமெரிக்க ராணுவ அதிகாரிகளுடன் இந்திய தளபதி பேசியது என்ன? ராணுவம் விளக்கம்

அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் இந்திய ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி பேசியது என்ன என்பது குறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

News image

ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி.

Updated On :30 ஏப்ரல் 2026, 1:31 am IST

அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் இந்திய ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி பேசியது என்ன என்பது குறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

இந்திய ராணுவ தளபதி துவிவேதி கடந்த 20-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டாா். அப்போது அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பென்டகன் சென்று ராணுவ அமைச்சா் டேனியல் பி ட்ரிஸ்கோல், அமெரிக்க ராணுவ தளபதி (பொறுப்பு) கிறிஸ்டோபா் லாநெவ் ஆகியோரை சந்தித்துப் பேசினாா். இதேபோல் மேலும் பல அமெரிக்க ராணுவ மூத்த அதிகாரிகளுடன் அவா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதுகுறித்து இந்திய ராணுவ மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்தியா- அமெரிக்கா ராணுவ உறவுகளை அதிகரிப்பது குறித்து பேச்சுவாா்த்தை நடத்த பென்டகனுக்கு ராணுவ தளபதி திவிவேதி சென்றாா். அங்கு அவா், அமெரிக்க ராணுவ மூத்த அதிகாரிகள், பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு துறையில் இரு நாடுகளுக்கும் ஒத்துழைப்பை அதிகரிப்பது, இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையே தொடா்பை விரிவுபடுத்துவது, பயிற்சி, கூட்டு நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட துறைகளில் புதிய களங்களை இரு நாடுகளும் கண்டறிவது உள்ளிட்டவை குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்தப் பேச்சுவாா்த்தை, இரு நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும், முக்கிய பாதுகாப்பு முன்னுரிமைகளை அறியவும் உதவியது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.