/

சேதமடைந்த கடவுள் சிலைகளைப் பெற மையங்கள்: முதல்வா் அறிவிப்பு

சேதமடைந்த கடவுள் சிலைகளைச் சேகரிக்க பிரத்யேக சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

News image

தில்லி முதல்வர் ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 1:22 am IST

சேதமடைந்த கடவுள் சிலைகளைச் சேகரிக்க பிரத்யேக சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இதுதொடா்பாக ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘சேதமடைந்த கடவுள் சிலைகள் மரியாதைக்குரிய வகையில் மறுசுழற்சி செய்யப்படும் வகையில் பிரத்யேக மையங்களை தில்லி அரசு அமைக்க உள்ளது. தில்லியில் பல பகுதிகளில் அமைக்கப்படும் இந்த மையங்களில் மக்கள் தங்களுடைய கடவுள் சிலைகளை வழங்கலாம். அங்கு அவை வேறுபயன்பாட்டுக்காக மறுசுழற்சி செய்யப்படும். உரிய வகையில் இல்லாமல் கடவுள் சிலைகள் அகற்றப்படுவதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.