திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வல்லுறவு வழக்கில் ஹிந்து அமைப்பு தலைவருக்கு ஜாமீன்! வரவேற்று ஊர்வலம் சென்ற ஆதரவாளர்கள்!

வல்லுறவு வழக்கில் ஹிந்து அமைப்பு தலைவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது பற்றி...

News image

சுஷில் பிரஜாபதி - x

Updated On :19 மே 2026, 4:28 pm IST

சட்ட மாணவியை வல்லுறவு செய்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ஹிந்து அமைப்பு தலைவரை மாலையிட்டு வரவேற்ற அவரது ஆதரவாளர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இதுதொடர்பான காணொலிகள் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து யுவ வாஹினி அமைப்பின் முன்னாள் தலைவரான சுஷில் பிரஜாபதி, சட்டக் கல்லூரி மாணவியை வல்லுறவு செய்த வழக்கில் கடந்தாண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

காஜியாபாத் மாவட்டம், மோடிநகரைச் சேர்ந்த எல்.எல்.பி. சட்டப் படிப்பு பயிலும் மாணவி, கடந்த ஆகஸ்ட் 8, 2025 -ல் முராத்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், ”காஜியாபாத் நீதிமன்றத்தில் தனக்கென ஒரு அலுவலக அறையைப் பெற்றுத்தர உதவுவதாகவும், சட்டத் தொழிலுக்குத் துணையாக இருப்பதாக உறுதியளித்து, சுஷில் பிரஜாபதி என்னை ஏமாற்றினார்.

மீரட் நீதிமன்றத்தில் ஒரு மூத்த வழக்கறிஞரின் கீழ் பயிற்சிப் பெற்றுக் கொண்டு, சட்டப் படிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தபோது 2021-ல் முதல்முறையாக பிரஜாபதியைச் சந்தித்தேன்.

என்னை காரில் ஒரு குடியிருப்புக்கு அழைத்துச் சென்று, அங்கு குளிர்பானத்தில் போதைப்பொருளைக் கலந்துகொடுத்து, என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். இதுதொடர்பாக யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்” என்று பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஆகஸ்ட் 11, 2025 அன்று பிரஜாபதியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற பிரஜாபதி, மே 17, ஞாயிறன்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

அப்போது, அவருக்கு மாலையிட்டு வரவேற்ற அவரது ஆதரவாளர்கள், தோளில் தூக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற காட்சிகள் இணையத்தில் பரவி, கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

கடந்தாண்டு பிரஜாபதியை காவல்துறையினர் கைது செய்தபோது, அவரது ஆதரவாளர்கள் காவல் நிலையம் வெளியே திரண்டு கலவரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Hindu Organization Leader Granted Bail in Rape Case! Supporters Hold Procession to Celebrate!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.