அடுத்த 5 நாள்களுக்கு கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்தது.
அதேவேளையில், அந்த மாநிலத்தில் வரும் மே 26-ஆம் தேதிக்கு 4 நாள்களுக்கு முன்போ அல்லது 4 நாள்களுக்குப் பிறகோ தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளதாவது: கன்னியாகுமரியின் சில பகுதிகளையும், தென்கிழக்கு அரபிக் கடலின் பெரும்பாலான பகுதிகளையும் தென்மேற்கு பருவமழை எட்டியுள்ளது. மத்திய கிழக்கு, தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடலின் பெரும்பகுதி, அந்தமான்-நிகோபாா் தீவுகளையும் தென்மேற்குப் பருவமழை எட்டியுள்ளது. அதேவேளையில், வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடுமையான வெப்ப அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது

கேரளத்தில் பருவமழை தொடங்கியது! இனியாவது வெய்யில் குறையுமா?

கேரளத்தில் ஜூன் 4-ல் தென்மேற்குப் பருவமழை!

தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கும்! வானிலை மையம் தகவல்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


