திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வரதட்சிணைக் கொடுமையா? நொய்டா பெண் மரணத்தில் திடீர் திருப்பம்

நொய்டா பெண் மரணத்தில் திடீர் திருப்பமாக, கணவரின் தாய் சில தரவுகளை வெளியிட்டுள்ளார்.

News image

வரதட்சிணைக் கொடுமை - சித்திரிப்பு

Updated On :19 மே 2026, 1:08 pm IST

போபால்: திருமணமாகி, 2 மாத கர்ப்பிணியாக இருந்த நொய்டா பெண் மரணத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கணவரின் தாய் அதற்கு எதிரான தகவல்களை ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளார்.

திவிஷா ஷர்மா, கணவர் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், அவருக்கு வரதட்சிணைக் கொடுமை நிகழ்ந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆனால், திவிஷா ஷர்மாவின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள, அவருக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கொடுத்ததாகவும், அதற்கான பணப்பரிமாற்ற தரவுகளையும் வெளியிட்டுள்ளார், ஓய்வுபெற்ற நீதிபதியான திவிஷா கணவரின் தாய்.

தலைமறைவாக உள்ள திவிஷாவின் கணவர் சமர்த் சிங்கின் முன் ஜாமீன் மனுவை நிராகரித்திருக்கிறது உயர் நீதிமன்றம். அவரைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 ஆயிரம் சன்மானம் அறிவித்திருக்கிறது காவல்துறை.

இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சமர்த் சிங்கின் தாய் கிரிபாலா சிங்குக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மே 12ஆம் தேதி திவிஷா, கணவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். டிசம்பர் மாதம் திருமணமான நிலையில், 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இதையடுத்து, திவிஷாவின் பெற்றோர், கணவர் வீட்டார் மீது கொலை மற்றும் வரதட்சிணைப் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

இதற்கிடையே, திவிஷாவுக்கு போதைப் பொருள் பழக்கம் இருந்ததாகவும், அவரது மனநிலை பாதிப்புக்குள்ளாகியிருந்ததாகவும், போதை மருந்து எடுத்துக் கொள்ளாவிட்டால் திவிஷாவின் கை, கால்களில் நடுக்கம் ஏற்பட்டுவிடும் என்றும் அவரது கணவர் வீட்டார் கூறியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

இது குறித்து திவிஷாவின் உறவினர் கூறுகையில், வீட்டிலிருந்தே வேலை செய்துவந்த திவிஷாவின் வேலை போனதால், அவர் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார், அவர் கர்பிணியாக இருந்த நிலையில், குழந்தையை ஏற்க கணவர் மறுத்துவிட்டது திவிஷாவுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.